100 ஆண்டுகளில் 100 புத்தகங்கள்… 3 நாளில் 365 ஒப்பந்தங்கள்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்.!
3 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியில் மட்டும் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. – அமைச்சர் அன்பில் மகேஷ்.
கடந்த 6ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் தொடங்கிய சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிறைவு விழாவில், தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே பல்வேறு புத்தகங்களின் பதிப்புரிமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘கடந்த 100 ஆண்டில் சுமார் 100 வேற்றுமொழி புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த 3 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியில் மட்டும் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என பெருமிதமாக அமைச்சர் குறிப்பிட்டார்.