மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே இந்த மருந்து வழங்க வேண்டும் – தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர்

Default Image

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்து மற்றும் மனநோய் மருந்து வழங்க வேண்டும் என  தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அறிவுறுத்தல்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்ட நிலையில், அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்து மற்றும் மனநோய் மருந்து வழங்க வேண்டும் என  தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

தவறான பயன்பாட்டைத் தடுக்க அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்