குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.! சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவித்த திருமாவளவன்

Default Image

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நாளை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 80க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க தற்போது விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்