கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது – ஐகோர்ட் கிளை
கோயில்களில் எந்த நபர்களுக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வாங்குவதோ, தலைபாகை அணிவிப்பது மற்றும் குடை பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்த்தை உயர்த்துவது போன்ற செயல்கள் இருக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கையை சேர்ந்த பாலசுந்திரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.