#BREAKING: ஏப்ரல் 1 முதல் மதுரையில் 24 மணி நேரமும் விமான சேவை!

Default Image

மதுரை விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அனுமதி.

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இரவிலும் விமானங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை தொடங்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இதில், மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் 24 மணி நேர சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்