சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது – டிஜிபி

Default Image

நேற்று நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது. ரசிகர்கள்  ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்த நிலையில், பரத்குமார் என்ற அஜித் ரசிகர் ஓடும் லாரியில் ஏறி ஆடியதால் கீழே விழுந்து  உயிரிழந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திர பாபு, சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.

கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம். இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்