பொங்கல் பண்டிகை முன்னிட்டு இவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க அரசு உத்தரவு..!
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க அரசு உத்தரவு
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அவர்களின் செயற்குறிப்பினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு தொடக்க ‘பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுகள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தகுதிவாய்ந்த 22,895 பணியாளர்களுக்கு 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்க தொகையினை பின்வருமாறு வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
ஊக்கத் தொகையினை வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சம்பந்தப்பட்ட தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.