முதியவருக்கு மருத்துவம் பார்த்த மாவட்ட ஆட்சியர்..!

Default Image

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதியவருக்கு மருத்துவம் பார்த்த ஆட்சியர் செந்தில் ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கோவில்பட்டி அரசு மருவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பது தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை பரிசோதித்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆட்சியர் செந்தில் ராஜ் மருத்துவம் படித்திருந்தாலும், தற்போது ஆட்சியராக இருந்துகொண்டு மருத்துவம் பார்த்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்