100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த ஜலேபி பாபா.. 14 ஆண்டுகள் சிறை..!

Default Image

100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த ஜலேபி பாபாவிற்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமி உட்பட மூன்று பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அந்தச் செயல்களை வீடியோ எடுத்த குற்றத்திற்காக, அமர்புரி என்றழைக்கப்படும் ஜலேபி பாபாவிற்கு ஹரியானா நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றம், 100 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும், இதனை வீடியோ எடுத்ததற்காகவும் அமர்புரி என்ற ஜலேபி பாபாவிற்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

2018 ஆம் ஆண்டில், ஃபதேஹாபாத் மாவட்டத்தின் தோஹானா நகரில் இருந்து ‘ஜலேபி பாபா’வின் மொபைல் போனில் இருந்து 120 பாலியல் வீடியோக்களை, போலீசார் மீட்டு அவரை கைது செய்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஜலேபி பாபா, தற்போது விதித்துள்ள தண்டனையின் படி இன்னும் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு பாதிக்கப்ட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அமர்புரியைக் கைது செய்ததாக ஃபதேஹாபாத் மகளிர் போலீஸ், பிம்லா தேவி உறுதிப்படுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்