தெருநாய்கள் கடித்ததில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு ..!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில், 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் மாவட்டம் பீம் நகரைச் சேர்ந்த 2 வயது சிறுமி, சிறுவர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் சிறுமியையும், அவருடன் விளையாடிய மற்றொரு சிறுவனையும் கடித்து குதறியுள்ளன.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.