அதிமுக முன்னாள் நிர்வாகி காலமானார் – இபிஎஸ் இரங்கல்

செந்துறை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் காலமானதை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல்.

பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான பி.கொளஞ்சிநாதன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம்கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் கொளஞ்சிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment