சிறுமி கூட்டு பலாத்காரம் – 6 பேர் கைது!

புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைது.

புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் அந்த சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்களை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 6 பேரும் அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில், கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Comment