#BREAKING: பொங்கல் பரிசுடன் கரும்பு? – முதலமைச்சர் அவசர ஆலோசனை!

Default Image

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க கோரிக்கை எழுந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்,  சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை ஜன.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்,பொங்கல் பரிசுத்தொகுப்பில்  கரும்பு வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர்   ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்