திருவண்ணாமலை அருகே பிறந்த பெண்குழந்தையை எரித்துக் கொன்றதாக தந்தை கைது!

Default Image

பிறந்த பெண்குழந்தையை  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே எரித்துக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டார். செங்கம் தொகுதிக்குட்பட்ட பாச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

வேண்டாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்று குழந்தைகள் பிறந்து விட்டதால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் வேண்டா குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

இதனிடையே பச்சிளம் குழந்தை எரித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பாச்சல் காவல்துறையினர் குழந்தையின் தந்தை சிவக்குமாரை கைது செய்தனர்.  மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என எண்ணிய சிவகுமார் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் எரித்துக் கொன்றதாக கூறியதால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது . குழந்தை எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலும் போலீஸார் தடயங்களை சேகரித்தனர்.

தகவலறிந்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,  விசாரணை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகமாக உள்ள பெண் சிசுக்கொலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்