ரூ.300 கோடிக்கான ஆயுதங்கள்.. போதைப் பொருள்கள்.. இந்திய எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு.!

Default Image

ரூ.300 மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் படகு குஜராத் கடற்கரையில் பிடிபட்டது.

இந்திய கடலோர காவல்படையினர், ATS குஜராத்வுடன் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், குஜராத்தில் இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகை பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்துள்ளனர்.

இதில், ரூ.300 கோடி மதிப்பிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக பாகிஸ்தான் படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுவதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்