தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – விஜயகாந்த்
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள்.
பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்க்ளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்,அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.’ என அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்,அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் pic.twitter.com/u0ohLpPvsx— Vijayakant (@iVijayakant) December 26, 2022