தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்!

Default Image

ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்.

கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 5 போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்