கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை கண்டித்து நோயாளிகள் சாலை மறியல்!
பணியிடப் பாதுகாப்புக் கோரி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மருத்துவர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.