கடலுக்கடியில் பிரம்மாண்ட கட்-அவுட்..!மெய் சிலிர்க்க வைத்த மெஸ்ஸி ரசிகர்கள்!

Default Image

கடலுக்கடியில் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து லட்சத்தீவைச்சேர்ந்த அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார்.

கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு, லட்சத்தீவை சேர்ந்த முகமது ஸ்வாதிக் என்ற ரசிகர் கடலுக்கடியில் மிகப்பெரிய கட்-அவுட் வைத்துள்ளார்.

அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொள்ளும் முன்னரே முகமது ஸ்வாதிக், தனது சமூக வலைதளத்தில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றால் மெஸ்ஸிக்கு கடலடியில் கட்-அவுட் வைப்பதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இந்தியாவில் கால்பந்துக்கு ரசிகர்கள் என்றால் கேரள ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம், ஏற்கனவே கேரள ரசிகர்கள் ஆற்றில் தங்களது பிடித்த வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸி, மற்றும் நெய்மர் ஆகியோரின் கட்-அவுட்டை வைத்து உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்