டெல்லி G20 மாநாடு – பிச்சைக்காரர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு!

Default Image

G20 உச்சிமாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற டெல்லி அரசு உத்தரவு.

G20 மாநாட்டிற்கான ஆயுதப்பணிகளின் ஒரு பகுதியாக, டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தி, அவர்களை வேறு இடத்தில் தங்கவைக்க டெல்லி நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2023 செப்டம்பரில் டெல்லியின் பிரகதி மைதானத்தில் G20 மாநாடு நடைபெற உள்ளது.

தலைமைப் பொறியாளரின் கீழ் 4 பேர் கொண்ட குழு ஒன்று, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பிச்சைக்காரர்களை துவாரகா மற்றும் இரவு தங்கும் விடுதிகளுக்கு மாற்றுவதற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது.

ISBTக்கு அருகில் அனுமன் மந்திரைச் சுற்றியுள்ள பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டு இரவு தங்குமிடங்களில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். G20 உச்சிமாநாட்டின் கூட்டங்களைக் கருத்தில் கொண்டு இதனை செய்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்