அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று மீண்டும் விசாரணை!

Default Image

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றம் நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டே வருகிறது.

கடந்த விசாரணையின்போது, அதிமுக பொதுக்குழு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதுபோன்று, தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 12-ஆம் தேதி விசாரிக்கப்பட்டிருந்த மனு அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இம்முறை, இன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்