உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நிலைக்கும்- நடிகர் விஷால் காட்டம்.!

Default Image

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், பலர் தங்களது பணத்தை இதில் செலவிடுவதால், பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு சில சினிமா பிரபலங்கள் இந்த ரம்மி விளையாட்டை விளம்பர படுத்தும் விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் சிலர் அதில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மக்களின் நலன் கருதி அதில் நடிக்க மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஷாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- இந்த விஷயம் தெரிஞ்சு தானே அஜித்தை புக் பண்றாங்க..? செம கடுப்பான துணிவு இயக்குனர்.!

இது குறித்து பேசிய விஷால் “ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் எவ்வளவு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த விளையாட்டால் பல குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. என்னை பொறுத்தவரை, இந்த விளையாட்டை கண்டிப்பாக தடை செய்யவேண்டும்.

இரண்டு கைகளில் நேர்மையாக சம்பாதித்தால் தான் அது காசு. அந்த காசை எடுத்துக்கொண்டு ஒரு வேலை சாப்பாட்டிற்க்கு குடும்பத்தில் கொடுத்தால் தான் ஆம்பளை என்று அர்த்தம். அதைவிட்டுவிட்டு இந்த மாதிரி சூதாட்டம் விளையாடாதீர்கள். இந்த விளம்பரத்தில் நடிப்பது பணம் வருகிறது என சிலர் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம், என்னிடமும் இந்த விளம்பரத்தில் நடிக்க கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்