அடுத்தடுத்து சென்னையில் இரு வீடுகளில் நகை பணம் கொள்ளை!

அடுத்தடுத்து இரு வீடுகளில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில்  நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீரராகவன் என்பவர் நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்துவைத்து விட்டு உறங்கியதாகக் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 7 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். அதைத் தொடர்ந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்ற கொள்ளையர்கள் துரைராஜ் என்பவரின் வீட்டின் கதவு தாழை நீக்கி நுழைந்து 7 ஆயிரம் ரூபாயை கொள்ளையத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment