மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் – அமைச்சர் பொன்முடி
மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் அமைச்சர் பொன்முடி பேட்டி.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொணடார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். உடனடியாக கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.