கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வானிலை மையம்

Default Image

மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது என பாலசந்திரன் பேட்டி. 

புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும். இன்று மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.இன்று மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கரையை கடந்த 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வடதமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நாளை வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்