மாண்டஸ் புயலால் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Default Image

மாண்டஸ் புயல் காரணமாக பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என அறிவிப்பு.

தமிழகத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா, சென்னை, அண்ணாமலை, திருவள்ளூர், எம்ஜிஆர், பாரதிதாசன், சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுபோன்று, பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதே கால அட்டவணைப்படி வரும் 16-ஆம் தேதி தேர்வுகள் நடக்கும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்