மாண்டஸ் புயல் : அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்..!

Default Image

மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.

மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது, அதிகபட்சமாக 85 கி.மீ வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்