Indonesia:திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் சிறை சட்டத்தை எதிர்த்து தற்கொலை படை தாக்குதல்

Default Image

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் அது தண்டனைக்குரியது என்று இந்தோனேசிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை கடந்த செய்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இதில் கோபமடைந்த நபர் ஒருவர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள காவல் நிலையம் மீது புதன்கிழமை தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காவல்நிலையத்தில் இருந்த ஒரு காவலர் பலியாகியுள்ளார்,இந்த தாக்குதலில் 11 பேர் காயமுற்றுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் அகஸ் சுஜாத்னோ என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காகவும், வெடிபொருட்களை தயாரித்ததற்காகவும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகஸ் தாக்குதலுக்கு பயன்படுத்திய  மோட்டார் சைக்கிளில் புதிய குற்றவியல் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்