தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை!

Default Image

மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமாக 149 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் 140 பேர் உயிரிழந்த, தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால், 52 சதவீத வாக்குகளுடன், காங்கிரஸ் வேட்பாளர் படேல் ஜெயந்திலால் ஜெராஜ்பாலை விட, 31.45% வாக்குகளை அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார். அக். இறுதியில் பாலம் இடிந்து 130க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்கு பாஜக மீது குற்றசாட்டு எழுந்த நிலையில், தற்போது அப்பகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்