கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.! காவலர் மற்றும் அவரது மனைவி அகால மரணம்..!

Default Image

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் காவலர் மற்றும் அவரது மனைவி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இறந்துள்ள இரண்டு பேர்  சிந்துகி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அவரது மனைவி மது என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்த சில மணிநிமிடத்தில் மக்கள் முயற்சி செய்து காரில் இருந்து உடலை வெளியே எடுத்தனர். தற்போது இறந்தவர்களின்  உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நெலோகி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்