உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வாழ்த்துகிறேன்.! அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.!

Default Image

கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பிறகு அறுமுகநேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு செய்து மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்காக கலைதிருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது . இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், மாணவர்கள் இந்த கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். என
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்தினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்