அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு!

Default Image

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்றது.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகின்ற 12ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

கடந்த ஆண்டு இதே தேதியில் தான் அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதே நாளில் இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வருகின்ற 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்