Shocking:ஆந்திராவில் ஓராண்டாக பூட்டியிருந்த வீட்டில் டிரம்முக்குள் பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு

Default Image

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பூட்டிய வாடகை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் மதுரவாடாவில் ஜூன் 2021 முதல் வாடகைதாரர், மனைவியின் கர்ப்பத்தைக் காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால் அவர் ஒருமுறை பின்வாசல் வழியாக வீட்டிற்கு வந்ததாகவும், ஆனால் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.ஒருவருடம் ஆகியும் வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடைமைகளை அகற்ற முற்பட்டபொழுது இந்த சம்பவம்  வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் ஒரு வருடத்திற்கு முன்னர் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக ஆரம்ப சாட்சியங்கள் காட்டுகின்றன என்று தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்