ஜெயலலிதா நினைவு தினம்.! தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட ஓபிஎஸ்.!

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனால் மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உட்பட ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வருகின்றனர்.

ஏற்கனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுடன் வந்து மரியாதை செலுத்திவிட்டு தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துவிட்டு சென்றார்.

அதனை தொடர்ந்து தற்போது, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.

 

 

Leave a Comment