#BREAKING: முன்னாள் முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேச தடை – உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்டஈடு தரக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச தடைகோரி, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார்.

அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆதாரங்களில் அடிப்படையிலேயே குற்றச்சாட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அறப்போர் இயக்கம் அவதூறாக பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்டஈடு தரக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment