திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள்! தீர்மானம் நிறைவேற்றம்!

Default Image

அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலையை டிசம்பர் 19-ல் திறக்க தீர்மானம், டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் கலவுய் வளாகம் என பெயர் சூட்டப்படும். அன்பழகன் பெயரில் விருது தரப்படும் என்று அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்று திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் பொது வாழ்வை போற்றும் கவியரங்கம் டிசம்பர் 17-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18-ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்