கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி திறக்க அனுமதி.! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம். – உயர்நீதிமன்றம் அனுமதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளிக்கூட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது. பள்ளி பெருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தை அடுத்து தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனை அடுத்து மாணவர்களின் கல்வி நலன் கருதி தனியார் பள்ளியை செயல்பட திறக்க அனுமதி தரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்