மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

Default Image

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கத்தில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை வீடியோ ஆதாரமாக கூறி வந்த நிலையில், செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வெளியே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் இருந்து அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தங்களது வார்டுகளில் எந்த பணிகளும் செய்யவில்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்