மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க, மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் – அண்ணாமலை
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவசர கதியாக தமிழக திமுக அரசு அறிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவசர கதியாக தமிழக
திமுக @arivalayam அரசு அறிவித்துள்ளது
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும்– மாநில தலைவர்
திரு. @annamalai_k pic.twitter.com/1gN3mQWYF3— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 28, 2022