அந்த 20 கோடி ரூபாயை திரும்ப பெற வேண்டும்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.    

சென்னை முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதில்  ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், போலி ஆவணங்கள் காண்பித்து 20 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலி ஆவணங்கள் மூலம் வழங்கிய இழப்பீடு வழங்கிய தொகையை தமிழக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்படி இழப்பீடு தொகையினை திரும்ப பெறாவிடில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்