உ.பி முதலமைச்சர் யோகி-அல்ல போகி..!கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே..!!

Default Image

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, அவரது காலணியாலேயே அடிக்க வேண்டும் என்று தோன்றியதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பல்ஃகார் சென்றிருந்த யோகி ஆதித்யநாத், சத்ரபதி சிவாஜி புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது காலில் அணிந்திருந்த காலணிகளை அவர் கழற்றவில்லை. இதுகுறித்து சிவசேனா பத்திரிக்கையான சாமனாவில் எழுதியுள்ள உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் யோகி அல்ல போகி என்று கூறியுள்ளார்.

சிவாஜி சிலைக்கு காலணியுடன் மாலை அணிவித்த போது, அவரது காலணிகளை கழற்றி, அவரையே அடிக்க வேண்டும் என்றும் தோன்றியதாக ஆத்திரத்துடன் உத்தவ் தாக்ரே பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்