PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! அடுத்தாண்டு ஆதித்யா – இஸ்ரோ அறிவிப்பு

Default Image

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும்.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 ஆகிய செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடல் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க புவிநோக்கு செயற்கைகோள் உதவும் எனவும் தகவல் கூறப்பட்டிருந்தது. இதன்பின், பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்திருந்தார்.

ராக்கெட் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும் புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6, 8 நானோ செயற்கைகோள்கள் என மொத்தம் 9 செயற்கைகோள்களை ஒவ்வொன்றாக பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் நிலைநிறுத்தி வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார்.

மேலும் சில பணிகள் பூர்த்தியடை வேண்டியுள்ளது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இஸ்ரோ விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைகோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தியது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும், நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்