டிச.29 முதல் இந்தியாவில் உணவு டெலிவரி சேவையை நிறுத்தும் அமேசான்!

Default Image

இந்தியாவில் அமேசான் அகாடமியை தொடர்ந்து உணவு விநியோக சேவைகள் நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு.

இந்தியாவில் உணவு விநியோக சேவைகளை நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 29 முதல் இந்தியாவில் உணவு விநியோக சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, அமேசான் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவக ஒப்பந்தாரர்களிடம், மே 2020-இல் தொடங்கிய உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிசம்பர் 29 தேதிக்குப் பிறகு அமேசான் ஃபுட் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறமாட்டீர்கள். அதுவரை தொடர்ந்து ஆர்டர்களைப் பெறுவீர்கள், அதனை நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அமேசான் தனது உணவக ஒப்பந்தாரர்களிடம் கூறியுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் வகையில்,  மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ‘அமேசான் அகாடமி’ யை மூட முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் தனது உணவு டெலிவரி சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்