உடலுறவின் போது மாரடைப்பு.. மரணம்.! உதவிக்கு கணவனை அழைத்த பெண்.! போலீசார் தீவிர விசாரணை…

Default Image

பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட போது 67 வயதான தொழிலதிபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அந்த பெண், தனது கணவர் மற்றும் சகோதரன் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த 67 வயதான பாலசுப்ரமணியம் எனும் தொழிலதிபர் தன்னுடைய வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு, ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பாலசுப்ரமணியத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து பதறிய அந்த பெண், உயிரிழந்த பாலசுப்ரமணியன் உடலை போலீசுக்கு பயந்து அகற்ற தனது கணவர் மற்றும் சகோதரனை அழைத்துள்ளார். அவர்களுடன் சேர்த்து பெங்களூருவில் ஆள்நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் பிளாஸ்டிக் பையில் உடலை சுற்றி தூக்கி இருந்துள்ளனர்.

இதனை போலீசார் கண்டறிந்து, அந்த பெண்ணையும், பெண்ணின் சகோதரன் , கணவன் ஆகியோரையும் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த பாலசுப்ரமணியன் உடலானது உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த முடிவு வந்த பிறகே, உறுதியான தகவல் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்து போன பாலசுப்ரமணியன் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், சமீபத்தில் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் மற்றும் பாலசுப்ரமணியன் செல்போன் எண் ஆராய்ந்த போது அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்ததும் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்