தென்மேற்கு பருவ மழை: அடுத்த 2- நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம்..!!

Default Image

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் இடியுடன் மழைக்கும்,  ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரியில் 10 சென்டிமீட்டரும், உதகையில் 9 சென்டிமீட்டரும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் தாளவாடியில்  7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்