திருச்சி:சமயபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை..! பலி பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது..!!

Default Image

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை 23 மணி நேரத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

கோவில் யானை மசினி, நேற்று பாகனை ஆலய வளாகத்திலேயே மிதித்துக் கொன்றது. இதையடுத்து கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது.கோயிலில் பாகன் உயிரிழந்ததால் கோயில் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள எட்டு திசையிலும் பலி பூஜைகள் நடைபெற்றது.

இன்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியஹாசனம், வாஸ்துசாந்தி, உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இருந்தும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகவே காணப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்