BREAKING NEWS: ராமேஸ்வரம் பம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!நிபுணர்கள் சோதனை..!

Default Image

பம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததையடுத்து, அங்கு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், 12 மணியளவில் குண்டு வெடித்து பாலம் தரை மட்டமாகும் எனத் தெரிவித்து இணைப்பைத் துண்டித்தான்.

இதையடுத்து பாம்பன் பாலத்தில், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பாலத்தின் அருகாமையிலுள்ள பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என அவர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்