தமிழ்நாடு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது – ஓபிஎஸ்

Default Image

அவ்வை நடராஜன் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

இவரது மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘தலை சிறந்த தமிழறிஞர் அன்புச் சகோதரர் முனைவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் பேராசிரியர், துணை இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் என பல பதவிகளை வகித்ததோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்திலே தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமலேயே அரசுச் செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தமிழ்நாடு ஒரு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது. திரு. அவ்வை நடராசன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாது பேரிழப்பு ஆகும். திரு. அவ்வை நடராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்