அணை:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

Default Image

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 863 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 794 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஆயிரத்து 863 கனஅடியாக அதிகரித்துள்ளது.

குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 150 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 51 புள்ளி பூஜ்ஜியம் 2 அடியாகவும், நீர் இருப்பு 4.6 டிஎம்சியாகவும் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்