200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்லும் இந்து சமய அறநிலையத்துறை…!

Default Image

இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு

இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல உள்ளனர்.

20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்களை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிரிப்பித்துள்ளார். காசி அழைத்துச் செல்லப்படுவோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர், இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்